எனது வலைப்பதிவு பட்டியல்

திங்கள், 1 ஆகஸ்ட், 2011

கட்டை விரலைத்தந்துவிடு

அன்று இராமனின் ஆசான்கள் வில்லாளி ஏகலைவனின் கட்டைவிரலைக் கேட்டார்கள் இன்று கல்விக்கண்ணை மூடிவிட முயல்கிறார்கள். வில்வித்தையின் சூத்திரத்தை கற்றுக்கொடுக்க மறுத்தார்களோ அதேபோல சமச்சீர் கல்வியையும் வழங்க மறுக்கிறார்கள்.வில்வித்தை அரச குடும்ப வாரிசுகள் மட்டுமே கற்றுக்கொள்ளலாம்.ஆண்டைகளின் கல்வியை அடிமைகள் எப்படி கேட்கலாம்.ஆண்டையும் அடிமையும் ஒரே தரமான கல்வியை எப்படி படிக்கலாம்,இதுவல்லவோ இன்றைய நிகழ்ச்சிநிரல். ஆகஸ்டு 2 ம் தேதி செவ்வாய் கிழமை புது தில்லி உச்ச நீதிமன்றம் வழங்கவிருக்கிற தீர்ப்பு இராமனுக்கா அல்லது வில்லாளி வாரிசுக்கா.துரோணாச்சாரியார்கள் இராமனின் பக்கம், ஏகலைவனின் பக்கம் யார்???